உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை இல்லை

அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை இல்லை

சிவகங்கை: தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் சூழல் நிலவுகிறது.தமிழகத்தில் 2020--21ம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 40 பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கூடுதல் வகுப்பறை கட்டடம் இல்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு ஆய்வக வசதி ஏற்படுத்தி தரவில்லை. மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் வாரத்திற்கு இரண்டு பாடவேளை ஆய்வகங்களில் செய்முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஆய்வக பயிற்சியே இல்லாமல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வில் அகமதிப்பீடு வழங்கப்பட்டு அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு செல்கின்றனர். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நான் முதல்வன் திட்ட வழிகாட்டு வகுப்புக்கள் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். ஆனால் உயர்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 10 கணினியை வைத்து தான் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதனால் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்த முடியவில்லை. மேல்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பாடப்பிரிவுகள் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு 6 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள் தேவப்படுகிறது. கூடுதல் வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் மரத்தடியிலும், தரையிலும் அமர்ந்து வேண்டிய நிலை உள்ளது. சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் 2021 ஆம் ஆண்டு அரசு உயர்நிலை பள்ளியாக இருந்ததை மேல்நிலைபள்ளியாக பள்ளி கல்விதுறை தரம் உயர்த்தியது. அப்போது இருந்த கட்டடம் தான் தற்போதும் உள்ளது. இந்த பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கிடையாது. இந்த பள்ளியுடன் தரம் உயர்த்திய 40 பள்ளிகளுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே தமிழக அரசு மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்றால் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளான வகுப்பறை, ஆய்வக வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை