உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் கோயிலில் ரூ.11 கோடியில் மேம்பாட்டு பணி உயர்நீதிமன்றத்தில் தகவல்

தாயமங்கலம் கோயிலில் ரூ.11 கோடியில் மேம்பாட்டு பணி உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.11 கோடியே 75 லட்சத்தில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடக்கு சாலைக்கிராமம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெறும். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருவர். அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், குளியலறை, தங்கும் விடுதி, ஓய்வறை, முடி காணிக்கை செலுத்தும் அறை, திருமண மண்டபம், ஆடு வதைக்கூடம், சமையல் கூடம், வாகன நிறுத்தும் வசதி இல்லை. பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப் பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வசந்தகுமார், கோயில் நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகினர். அரசு வழக்கறிஞர் அசோக்,''கோயிலில் ரூ.11 கோடியே 75 லட்சத்தில் மேம்பாட்டு பணி மேற்கொள்ள அறநிலையத்துறை கமிஷனர் அரசின் ஒப்புதலுக்காக பரிந்துரைத்துள்ளார். பல்வேறு துறைகள் சார்பில் பல கட்ட ஆய்வு செய்ய வேண்டியுள்ளது,'' என்றார். நீதிபதிகள் அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.10 க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை