உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காமாட்சி, பெரிய கருப்பண்ண சுவாமி கோயிலில் ஜன.20ல் கும்பாபிேஷகம்

காமாட்சி, பெரிய கருப்பண்ண சுவாமி கோயிலில் ஜன.20ல் கும்பாபிேஷகம்

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை காமாட்சி அம்மன், பெரிய கருப்பண்ணசுவாமிகோயில் கும்பாபிேஷகம்ஜன.,20ல் நடைபெறுகிறது.நாட்டரசன்கோட்டையில் உள்ள காமாட்சி அம்மன், பெரிய கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வ கோயிலில் சீரமைப்பு பணி செய்து, கும்பாபிேஷகத்திற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஜன., 17 அன்று காலை 5:15 மணிக்கு அனுக்கை, கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக பூஜை துவங்கியது. பூர்ணாஹூதி, தீபாராதனை, அன்று மாலை 6:30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. ஜன.,18ல் விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு 8:40 மணிக்கு 3 ம் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து நான்காம், ஐந்தாம் யாகசாலை பூஜைகள் நடைபெறும்.ஜன., 20 அன்று காலை 6:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்குகிறது. கோ, லட்சுமி பூஜை நடைபெறும். காலை 8:40 மணிக்கு ஆறாம் கால யாக பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடைபெறும்.அன்று காலை 9:15 முதல் 10:30 மணிக்குள் மூலவர், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்த உள்ளனர். யாகசாலை காலங்களில் திருமறை, திருமுறை பாராயணமும் நடைபெறும். ஏற்பாடுகளை கும்பாபிேஷக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை