விபத்தில் ஒருவர் பலி
இளையான்குடி: இளையான்குடி புதுார் பகுதியை சேர்ந்த சீனி முகம்மது மகன் முகமது இஸ்மாயில் 55, இவர் டிரை சைக்கிள் ஓட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு 7:40 மணிக்கு புதுாரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலியானார்.இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.