70 பவுன் நகையை திருப்பி தராத அடகு கடை உரிமையாளர் கைது
சிவகங்கை:சிவகங்கையில் 70 பவுன் நகையை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய அடகு கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை காமராஜர் காலனி ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் 42. இவர் 2019 ல் சகோதரர் மருத்துவ செலவிற்காக திருப்புத்துார் ரோடு மேலரதவீதி சுப்பிரமணியன் மகன் யோகநாத்முரளி 43 , என்பவருக்கு சொந்தமான அடகு கடையில் 70 பவுன் தங்க நகையை பல்வேறு தேதிகளில் அடகு வைத்து ரூ.14 லட்சம் பெற்றுள்ளார்.2023ல் அடகு நகையை திருப்புவதற்கு மணிகண்டன் சென்றபோது கடை மூடப்பட்டு இருந்தது. இதனால் உரிமையாளர் யோகநாத்முரளி வீட்டிற்கு சென்று அடகு நகை குறித்து கேட்டுள்ளார். அதற்கு நகையை திருப்பி தர முடியாது என அவர் மணிகண்டனை மிரட்டியுள்ளார்.யோகநாத்முரளியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.