உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்னல் தாக்கி  தபால்காரர் பலி 

மின்னல் தாக்கி  தபால்காரர் பலி 

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் 53. இவர் சோழபுரத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக உள்ளார். நேற்று முன் தினம் இரவு 9:30 மணிக்கு வீட்டிற்கு அருகில் சென்றபோது, மின்னல் தாக்கி அதிர்ச்சியில் இறந்தார். இவருக்கு ஏற்கனவே இருதய நோய் பாதிப்பு இருந்துள்ளது. சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !