உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை கோயிலில் பிரதோஷம்

மானாமதுரை கோயிலில் பிரதோஷம்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் புரட்டாசி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற புரட்டாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். சிவனடியார்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர்.இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலிலும்,வேம்பத்துார் ஆவுடையநாயகி சமேத கைலாசநாதர் கோயிலிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனை நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை