உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

கலை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

சிவகங்கை :

கலை போட்டி: மாணவர்களுக்கு பரிசளிப்பு

கலைப்பண்பாட்டு துறை சார்பில் நடந்த கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசு, சான்றினை வழங்கினார்.கலைப்பாண்டு துறை சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் வயது 17 முதல் 35க்கு உட்பட்டவர்களுக்கு கலைப்போட்டி நடத்தியதில், மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை, சான்று வழங்கப்பட்டது. குரலிசை முதலிடம் என்.ஹரீஸ்ராகவன், இரண்டாம் இடம் கே.சுபாஷினி, மூன்றாம் இடம் எம். அஸ்வினி, பரதம் முதலிடம் ஆர்.மகேஸ்வரன், இரண்டாம் இடம் டி.ஸ்ரீபாலா, மூன்றாம் இடம் வி.சங்கவி, கருவி இசை முதலிடம் பி.ராஜகோபால், இரண்டாம் இடம் கே.சந்துரு, மூன்றாம் இடம் பி.ராஜேஷ் கண்ணன்.ஓவியம் முதலிடம் எம்.ஆர்த்திகா, இரண்டாம் இடம் ஆர்.சோபனா, மூன்றாம் இடம் பி.நர்மதா பிரியதர்ஷினி, கிராமிய நடனம் முதலிடம் எம்.சாரதா பிரிதா, இரண்டாம் இடம் எம்.ஆகாஷ், மூன்றாம் இடம் கே.சங்கீதா ஆகியோருக்கு பாராட்டு சான்று, பரிசு தொகையை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

கலை போட்டி: மாணவர்களுக்கு பரிசளிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி