உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குளத்தில் இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

குளத்தில் இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூரில் குளத்தில் மூழ்கி இறந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் இறப்பு நிவாரணமாக ரூ 2 லட்சம், சொந்த நிதியாக ரூ 2 லட்சத்தை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். திருக்கோஷ்டியூரில் டிச. 8 ல் கோயில் முன்புறமுள்ள குளத்தில் மூழ்கி திருக்கோஷ்டியூரில் வசிக்கும் ஜெயலெட்சுமி மகன்களான விஷ்ணு 12 மற்றும் ஹரிகிருஷ்ணா 9, இறந்தனர். அவர்களுக்கு இறப்பு நிவாரணமாக அரசு சார்பில் தலா ரூ ஒரு லட்சம் வீதம் ரூ 2 லட்சம் முதல்வர் அறிவித்திருந்தார். நேற்று கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் திருக்கோஷ்டியூரில் சிறுவர்களின் தாயான ஜெயலெட்சுமியிடம் ரூ 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ 2 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினார். ஜெயலெட்சுமி வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கேசவதாசன், தாசில்தார் மாணிக்கவாசகம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி