மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
23-Oct-2025
திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று சூரசம்ஹாரமும், நாளை திருக்கல்யாணமும் நடைபெறும். இங்கு கந்தசஷ்டி விழா அக்.22ல் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை 6:00 மணிக்கு சுப்பிரமணியர் சன்னதியில் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. இன்று ஆறாம் திருநாளை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். மாலையில் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளும் உற்ஸவருக்கு தீபாராதனை நடந்து, தேரோடும் வீதியில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும். நாளை காலை 10:40 மணிக்கு மேல் காலை 11:30 மணிக்குள் சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
23-Oct-2025