ஆயுதப்படையில் டூவீலர்கள் ஏலம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 39 டூவீலர்கள் எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் அக்.25 அன்று காலை 10:00 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு பொது ஏலம் விடப்பட உள்ளது.ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவர்கள் ஏலம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தங்களது ஆதார் அட்டை நகலுடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மது விலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.