மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
06-May-2025
சிவகங்கை: காளையார்கோவில் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் மே 31 ல் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக திருவிழா துவங்குகிறது. ஜூன் 8 ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில், மே 30 ம் தேதி இரவு 7:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். மே 31 அன்று காலை 10:35 முதல் 11:15 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு வைகாசி விசாக திருவிழா துவங்குகிறது. அன்று இரவு சுவாமி, அம்பாளுடன் காமதேனு, வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவார். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 10:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் அன்னம், கிளி, ரிஷபம், யானை, சிம்மம், குதிரை வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.திருவிழாவின் 7 ம் நாளான ஜூன் 6 ம் தேதி பொய்ப்பிள்ளை, மெய்ப்பிள்ளை ருத்ர தீர்த்தம் நடைபெறும். எட்டாம் நாள் விழாவான ஜூன் 7 ம் தேதி நடராஜர் அபிேஷகம் நடைபெரும். ஒன்பதாம் நாளான ஜூன் 8 ம் தேதி அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சுவாமி, சவுந்திரநாயகி தேரிலும், சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எழுந்தருள்வர். தொடர்ந்து சிறப்பு அபிேஷகம் நடைபெறும். அன்று காலை 10:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான ஜூன் 9 ம் தேதி தெப்ப உற்சவம், ஸப்தாவரண பூஜைகளுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறும்.
06-May-2025