உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை அய்யனார் கோயிலில் வருஷாபிஷேகம்

மானாமதுரை அய்யனார் கோயிலில் வருஷாபிஷேகம்

மானாமதுரை- மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள வைகை கரை அய்யனார்,அலங்கார குளம் சோனையா சுவாமி கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஹோமங்கள் வளர்த்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்தும், 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகளை செய்த பின்னர் புனித நீரால் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகளை நடத்தினர்.கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களான விநாயகர், பாலமுருகன், காளியம்மன், லாட சன்னாசி, ராக்கச்சி அம்மன், நவக்கிரகங்கள், மாயாண்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் காளீஸ்வரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை