மேலும் செய்திகள்
இளையான்குடி கோயிலுக்கு தருமை ஆதினம் இன்று வருகை
28-Oct-2025
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருமண பந்தலில் ஞானாம்பிகை அம்மனுடன் ராஜேந்திர சோழீஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார். முன்னதாக விநாயகர், முருகன் மற்றும் புனிதவதி அம்மையாருடன் மாறநாயனாரும் எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் ஹோமங்களை வளர்த்து பூஜைகளை செய்த பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய பிறகு வீதி உலா நடைபெற்றது. விழாவில் இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
28-Oct-2025