நலத்திட்ட உதவி வழங்கல்
சிவகங்கை; காளையார்கோவிலில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.கிளை தலைவர் தெய்வீக சேவியர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுந்தரராமன், மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சேதுராமன், தலைமை ஆசிரியை லதா முன்னிலை வகித்தனர். செயலாளர் அலெக்சாண்டர் துரை வரவேற்றார். துணை தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.