உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நலத்திட்ட உதவி வழங்கல் 

 நலத்திட்ட உதவி வழங்கல் 

சிவகங்கை: காளையார்கோவிலில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமில் 99 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடிக்கான நலத்திட்ட உதவியை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.பருத்தி கண்மாய் பகுதியில் விதைப்பண்ணை, மறவமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மையம், பிரதமரின் வீடு, கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். மனு வாங்கும் நிகழ்வு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். தாசில்தார் முபாரக் உசேன் வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, கூட்டுறவு இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத், பி.டி.ஓ., சாந்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி