உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி:  ரூ.64.13 லட்சத்திற்கு வழங்கல் 

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி:  ரூ.64.13 லட்சத்திற்கு வழங்கல் 

சிவகங்கை, : சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 185 பயனாளிகளுக்கு ரூ.64.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.விழாவிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் வரவேற்றார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரை ஆனந்த், ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான் பங்கேற்றனர். விழாவில் 185 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரி சக்கர நாற்காலி, திறன்பேசி, மோட்டார் தையல் இயந்திரம், எலக்ட்ரானிக் பிரெயில் ரீடர் கருவி ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். ஆசிரியை பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி