உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு

 பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு

மானாமதுரை: திருப்புவனம் புதுார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவல்லி 46, இவர் மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.எஸ்.,ஐ., ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மானாமதுரையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்காக திருப்புவனத்தில் இருந்து பஸ்சில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து தாயமங்கலம் ரோட்டில் உள்ள திருமண மஹாலுக்கு செல்வதற்காக மற்றொரு டவுன் பஸ்சில் சென்றபோது தனது பையில் பர்சில் இருந்த 3 பவுன் நகை, ரூ.4 ஆயிரம், அலைபேசி ஆகியவை காணாமல் போனதை அறிந்து மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ