தேன்கூடு முடிக்கு வேலை கிடையாது!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நசுவினி ஆற்றில் கல்லுாரி மாணவ - மாணவியருக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லுாரி மாணவர்கள், விதவிதமான ஸ்டைலில் முடி வெட்டி இருப்பதை பார்த்து, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அதிர்ச்சியடைந்தார். அவர்களிடம், 'நீங்கள் படித்து வேலைக்கு செல்ல வேண்டும். இப்படி எல்லாம் முடி வெட்டி இருந்தால், வேலை கிடைக்காது; மதிப்பையும் தராது' என, அறிவுரை வழங்கினார். கலெக்டரின் இந்த அறிவுரையை பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.