உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சாவூரில் பிடிபட்டது மோதிர வளையன் பாம்பு

தஞ்சாவூரில் பிடிபட்டது மோதிர வளையன் பாம்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், கீழவாசல் ராயல் சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில், பாம்பு இருப்பதாக அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையிலான குழுவினர், டெல்டா மாவட்டங்களில், அரிதாக காணப்படும் மோதிர வளையன் எனப்படும் 'ரிங்கெட்' என்ற இனத்தை சேர்ந்த, 100 செ.மீ., பாம்பை மீட்டனர். பின், வன ஊழியர்கள் அறிவுரைப்படி, அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். சதீஷ்குமார் கூறியதாவது: மோதிர வளையன் பாம்பு ஆசியா கண்டத்தில் காணப்படும் அரிதான இனம். இது, அழிவின் விளிம்பில் உள்ள உயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உடலை 'ஸ்பிரிங்' போல வளைத்து இரைகளை தாக்கி பிடிக்கக் கூடிய, இப்பாம்பு, மனிதனுக்கு தீங்கில்லாதது. டெல்டா மாவட்டங்களில் மிகவும் அரிதாக காணப்படுவது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி