உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு

காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு

கம்பம்: ஆண்டிற்கு இரண்டு முறை பசுக்களுக்கு காணை நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசு இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பரில் இம் முகாம் நடைபெறும். இந்தாண்டு கடந்த மாதம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடத்தி தற்போது நிறைவடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேகமலை பகுதியில் உள்ள 210 மாடுகளுக்கு அடுத்த வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ