உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுறவு துறை ஊழியர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு துறை ஊழியர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி : கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், முதுநிலை ஆய்வாளர் பணியிடத்தில் இருந்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் பதவி உயர்வு பணி ஒதுக்கீடு பட்டியலில் பணிமூட்பு அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வலியுறுத்தி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மாரிச்சாமி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பிரித்திவிராஜ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தாஜூதீன், அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத்துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் பேசினர். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் நவீன்பிரீத்தா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை