உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் சப்ளை; பொதுமக்கள் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் சப்ளை; பொதுமக்கள் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

பெரியகுளம் : தொடர் மழையால் பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி உள்ளனர்.பெரியகுளம் நகராட்சி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் சேர்த்துப்பாறை அணைக்கு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் குழாய் தொட்டிக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அங்கிருந்து தென்கரை, வடகரை, என்.ஜி. ஓ., காலனி, புது பஸ் ஸ்டாண்ட் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி அனைத்து வார்டுகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளையும் 58 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.பேரிஜம் ஏரி, சோத்துப்பாறை அணை பகுதியில் பெய்யும் தொடர் மழையால் மழைநீர் கலங்கலாக வருகிறது. இதனால் பெரியகுளத்தில் இரு நாட்களாக கலகங்கலான குடிநீர் சப்ளையாகிறது. இதனை மக்கள் குடிக்க முடியவில்லை. இதனால் சிலர் மினரல் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில், 'சில தினங்களாக பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது. அணை மேற்பகுதி கரையோரம் மண்சரிவினால் கலங்கலாக வரும் குடிநீரை சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நான்குமுறை குளோரினேசன் செய்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் கலங்கலாகவே வருகிறது. எனவே குடிநீரை காய்ச்சி குடிக்கவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை