உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனியில் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாஜ்தீன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் நாகராஜ், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் லட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்க மாநில நிர்வாகி அழகுராஜ், நிர்வாகிகள் முத்துப்பாண்டி, பரமன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை