உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீர் வினாடிக்கு 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது.முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த வினாடிக்கு 300 கன அடி நீர், ஆக.20ல் வினாடிக்கு 105 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடி நடப்பதால் நீரின் அளவை அதிகரிக்க விவசாயிகள் வலியுறுத்தினர். நேற்று காலை 6:00 மணிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்மட்டம் 129.70 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 623 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 4632 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் கடும் வெப்பம் நிலவியது.லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்ய குறைந்தது 300 கன அடி நீர் தேவைப்படும் . நீர் திறப்பு 105 கனஅடியாக குறைந்ததால் ஆக.20 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் நீர் திறப்பு அதிகரித்ததால் ஒரு ஜெனரேட்டரில் 36 மெகா வாட்மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை