உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் பாசன நீர் திறப்பு

வைகை அணையில் பாசன நீர் திறப்பு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் வெளியேறுகிறது. தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் சில நாட்கள் அணையில் இருந்து நீர் திறந்து விட்டும் சில நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது. பிப். 23ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் 61.84 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 111 கனஅடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை