மார்க்சிஸ்ட் கம்யூ., ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
ேதனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகாச் செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேனி அல்லிநகரம் பொட்டல்களத்தில் பட்டியல் இன மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் கட்டிவரும் வீடுகளை உரிய பயனாளிகளுக்கு வழங்க வலியுறுத்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, மாவட்டக் குழு உறுப்பினர்கள் நாகராஜ், ஜெயப்பாண்டி, நிர்வாகிகள் வெங்கடேசன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவியை பாலியல் துன்புறுத்தி கொலை செய்தவர்களை கண்டித்தும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ஞானவேல், உதயசூரியன், நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.