மேலும் செய்திகள்
டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி
29-Aug-2024
பெரியகுளம்: பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். செயலர் சாந்தாமேரி ஜொசிட்டா, பேராசிரியை பாத்திமா மேரி சில்வியா முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறை தலைவர் அருள்மொழி வரவேற்றார். திருவனந்தபுரம் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பேராசிரியர் அசோக், இந்தியாவின் நிலவின் பயணம், சந்திராயன்-3 யை குறித்து பேசினார். பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு அறிவியல் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இயற்பியல் துறை துணை பேராசிரியை ஜூலியட் கிறிஸ்டினா மேரி நன்றி கூறினார்.
29-Aug-2024