உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை

போடி: போடி அருகே ரங்கநாதபுரம் வ.உ.சி., நகரை சேர்ந்தவர் தனவந்தன் 26. இவர் போடியில் நகல் எடுக்கும் கடை நடத்தினார். இவரது மனைவி பிரியா 23. இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனவந்தன் ஆன்லைன் விளையாட்டில் உள்ள ஆர்வத்தால் தனது தந்தையிடம் ரூ.53 லட்சம் வரை பெற்று இழந்துள்ளார். இது போல பல நபர்களிடம் கடன் பெற்றுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். தர முடியாத நிலையில் மனம் உடைந்த தனவந்தன் நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை