உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துா ர்வாரப்படாத அருப்புக்கத்தான் ஓடை : மழைநீர் செல்வதில் சிரமம்

துா ர்வாரப்படாத அருப்புக்கத்தான் ஓடை : மழைநீர் செல்வதில் சிரமம்

போடி: போடி அருகே காமராஜபுரத்தில் உள்ள அருப்புக்கத்தான் ஓடை தூர்வாரப்படாததால் செடிகள் வளர்ந்து, குப்பை கழிவுகளாக தேங்கியுள்ளதால் மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. போடி, குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பெய்யும் மழை நீரானது அணைப் பிள்ளையார் அணை வழியாக மீனாட்சியம்மன் கண்மாயில் தேங்குகிறது. இங்கு நிரம்பும் நீரானது, விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து காமராஜபுரம் அருப்புக்கத்தான் நீர்வரத்து ஓடைப் பகுதிக்கு வந்தடைகிறது. தற்போது கொட்டகுடி ஆற்றில் துவங்கி காமராஜபுரம் வரை உள்ள நீர்வரத்து ஓடையின் இருபுறமும் விவசாயிகள் ஆக்கிரமித்து மரங்கள் வளர்த்து உள்ளனர். காமராஜபுரத்தில் உள்ள அருப்புக்கத்தான் ஓடை தூர்வாராததால் மழைநீர் சீராக செல்ல முடியாத நிலை உள்ளது. ஓடையில் செடிகள் வளர்ந்து, குப்பை கழிவுகளாக தேங்கிக் கிடப்பதால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் அருப்புக்கத்தான் நீர்வரத்து ஓடைப் பகுதியை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி