உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.ஏ.ஓ.,வை தாக்கி கொலை மிரட்டல்

வி.ஏ.ஓ.,வை தாக்கி கொலை மிரட்டல்

தேவாரம்: தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வருபவர் ராம்குமார் 38. இவரும் கிராம நிர்வாக உதவியாளர் சுமதியும் டி. சிந்தலைச்சேரி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பணி செய்தனர். அப்போது டி.சிந்தலைச்சேரி கிழக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் 42, என்பவர் மதுபோதையில் வந்து வி.ஏ.ஓ., வையும், உதவியாளரும் தகாத வார்த்தையால் பேசி உள்ளார். அவரை சமாதானம் செய்து வெளியே போகச் சொன்னதால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் வெளியே சென்று உடைந்த கண்ணாடி பாட்டிலுடன் வந்து வி.ஏ.ஒ., வின் இடது கையில் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார். பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். போலீசார் பால்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ