அடைவுத் தேர்வில் 8424 மாணவர்கள் பங்கேற்பு
தேனி: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3,5,8ம் வகுப்பு மாணவர்களின் திறனை அறிந்து கொள்ள மாநில அளவிலான 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தப்படுகிறது. நேற்று 3ம் வகுப்பு படிக்கும் 8424 பேர் இந்த தேர்வினை எழுதினர். தேர்வு மையங்களை இணை இயக்குநர் ஜெயக்குமார், பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன் ஆய்வு செய்தனர்.