உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திராட்சை ஏற்றுமதிக்கு நடவடிக்கை தேவை

திராட்சை ஏற்றுமதிக்கு நடவடிக்கை தேவை

கம்பம்: திராட்சை ஏற்றுமதிக்கு தேவையான உதவிகள் செய்ய வேளாண் வணிகம், தோட்டக்கலைத்துறை முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர். தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், வாழை, திராட்சை, மா போன்ற பழப் பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. காய்கறி பயிர்கள் உள்ளூர் தேவை, வெளிமாவட்டங்கள, கேரளா மார்க்கெட்டிங் சென்டர்களாக உள்ளது. ஏற்றுமதியும் கணிசமாக உள்ளன.மாவட்டம் முழுவதும் பரவலாக வாழை சாகுபடி உள்ளது. இதில் செவ்வாழை, நாழிப்பூவன், நேந்திரன், ஜி 9, அதிக பரப்பில் உள்ளன. தற்போது செவ்வாழை,நாழிப் பூவன் பழங்கள் ஏற்றுமதியாகிறது. ஆனால் அதிக பரப்பில் சாகுபடியாகும் திரட்சை ஏற்றுமதி செய்யவில்லை. திராட்சை கம்பம் பள்ளத்தாக்கிலும், சின்னமனூர் வட்டாரத்திலும் சாகுபடியாகிறது. கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டியில் தாம்சன் விதையில்லா திராட்சை மற்றும் பன்னீர் திராட்சையும் சாகுபடியாகிறது. இதில் பன்னீர் திராட்சையை ஏற்றுமதி செய்ய முடியாது என்று கூறி ஏற்றுமதி செய்யாமல் உள்ளனர். இது பற்றி திராட்சை சாகுபடியாளர்கள் கூறுகையில், வாழை ஏற்றுமதி செய்யப்படுவது போல திராட்சையும் ஏற்றுமதி செய்ய அரசு ஊக்குவிக்க வேண்டும். அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும், குறிப்பாக பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய தேவையான தொழில்நுட்பங்களை கூற வேண்டும். ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். அரசிற்கு அந்நிய செலவாணி கிடைக்கும். கன்டெய்னர் கட்டண உயர்வுக்கு மானியம் தர வேண்டும் என்றனர். வட்டார வாரியாக திராட்சை விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேளாண் வணிகம், தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று திராட்சை விவசாயிகள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை