பச்சைபயறு உற்பத்தி அலுவலருக்கு விருது
தேனி: தமிழக அளவில் ஒவ்வொரு பயிரியிலும் அதிக உற்பத்தி செய்யும் விவசாயிகள், வட்டார வேளாண் அலுவலர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023 --20-24ம் ஆண்டில் பயிர் சாகுபடியில் அதிக உற்பத்தி செய்ய உதவிய வேளாண் அலுவலர்களுக்கு சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பரிசு வழங்கினார். பச்சைபயறு சாகுபடியில் அதிக உற்பத்தி செய்த உத்தமபாளையம் வேளாண் துணை அலுவலர் ஆனந்தனுக்கு விருது வழங்கப்பட்டது.