உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பாலாபிஷேகம்

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பாலாபிஷேகம்

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பாலாபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது.சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராக கருதப்படுபவர் கால பைரவர். நாயை வாகனமாக கொண்ட இவர் காசி நகரின் காவல் தெய்வமாகவும், சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக விளங்குபவர். தேய்பிறை அஷ்டமி சிவ வழிபாட்டிற்கு உகந்த நாள். சின்னமனூர் சிவகாமியம்மன் உடதுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் நேற்று 192 வது தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் 108 பால் குடங்களகளில் பால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் யாகபூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்ஸவர் கால பைரவருக்கு வாழை நாறுகளால் உருவாக்கப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, உற்ஸவருக்கு 13 வது ஆண்டு மகா கால பைரவர் யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர். பிரசாதம், அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை