மேலும் செய்திகள்
அக்கா தற்கொலையால் பகை மாமாவை கொன்றார் மைத்துனர்
27-Jun-2025
தேனி: தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியில் கணவரை இழந்த தங்கை விஜயலட்சுமியிடம், மைத்துனருக்குஅரசு வழங்கிய ரூ.12 லட்சத்தை மோசடி செய்த ஆசிரியர் வசந்த் 45, மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.தேனி அருகே கொடுவிலார்பட்டி விநாயகா நகர், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சென்றாய பெருமாள் 45. இவர் கடந்த2025 ஜன. 31ல் சர்க்கரை நோயில் பாதித்து இறந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி 40. இத் தம்பதியின் மகள் நிர்ஞ்சனா 9. விஜயலட்சுமியின் சகோதரர் வசந்த் 45. இவர் ஆண்டிபட்டி தாலுகா, குமணன்தொழு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தனது சகோதரியின் கணவர் உயிரிழந்ததால் அவரையும்,அவரது மகளையும் தனது வீட்டில் வைத்து பராமரிப்பதாக தெரிவித்தார்.இவரை நம்பி மகளுடன் கொடுவிலார்பட்டியில் தனதுதந்தையுடன் விஜயலட்சுமி வசித்து வந்தார். இந்நிலையில் விஜயலட்சுமி அரசு பணப்பலன் பெற, வங்கி கணக்கு துவங்க வேண்டும் என வசந்த் கூறி தங்கையிடம் 4 செக்குகளில் கையெழுத்து பெற்றார். பின் வங்கியில் சகோதரி விஜயலட்சுமியின் வாரிசுதாரர் மகள் நிரஞ்சனா என்பதற்கு பதில் தன் பெயரை சேர்த்து வங்கிக்கணக்கு பரிவர்த்தனைக்கான அலைபேசி எண்ணுக்கு வசந்த் தனது அலைபேசி எண்ணை கொடுத்துள்ளார். இறந்த ஆசிரியர் சென்றாயபெருமாளுக்கு கிடைக்க வேண்டியபணபலன்கள் ரூ.12 லட்சம் விஜயலட்சுமியின் வங்கிக் கணக்கிற்கு டிபாசிட் ஆன விபரம், வசந்த்தின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.இதனை அறிந்த வசந்த் ஏற்கனவே தங்கை விஜயலட்சுமி கையெழுத்திட்ட 4 'செக்'குகளை வைத்து 3 தவணைகளில் ரூ.12 லட்சத்தை எடுத்துள்ளார். இது பற்றி கேட்ட விஜயலட்சுமியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார். விஜயலட்சுமி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வசந்த் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Jun-2025