மனைவிக்கு கத்திக்குத்து கணவர் மீது வழக்கு
தேனி: தேனி பாரஸ்ட் ரோடு முதல் தெரு தனபாண்டி.43. இவரது மனைவி செல்வலட்சுமி 38. இவர் தேனி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தட்டச்சராக பணியாற்றி வருகிறார். கணவர் போட்டோகிராபர் பணி செய்கிறார். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். தனபாண்டி வேலைக்கு செல்லாமல் தினமும் மதுக்குடித்து வந்ததால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வீட்டு வாடகை கட்டுவதற்கு கணவரிடம் மனைவி பணம் கேட்டபோது, ஆபாசமான வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார். பின் ஆத்திரம் அடைந்து கத்தியால் மனைவியின் வயிற்றில் குத்தினார். அருகில் இருந்தவர்கள் கண்டித்ததால், தனியார் மருத்துவமனையில் மனைவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். மனைவி புகாரில் தேனி எஸ்.ஐ., ராஜமாணிக்கம் கணவர் தனபாண்டி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.