சொத்து பிரச்னையில் தாயை அடித்த மகன் மீது வழக்கு
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கீழத்தெருவைச் சேர்ந்த போஸ் மனைவி மயில் 60. பத்து ஆண்டுகளுக்கு முன் போஸ் இறந்துவிட்டார். இவரது மகள் அபிநயா கணவரை பிரிந்து தாயுடன் உள்ளார். இவரது மகன் கிஷோர் 29. மருமகள் தர்ஷினி 25. வீட்டருகே வசித்து வருகின்றனர். மயிலுக்கும் அவரது மகனுக்கும் பூர்வீக வீட்டை பிரிப்பதில் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் மயில் வைத்திருந்த வீட்டு பத்திரத்தை கிஷோர் அடமானம் வைத்துள்ளார். இது குறித்து கேட்ட மயிலை, கிஷோர் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தும், மருமகள் தர்ஷினியும் தாக்கினார். ஜெயமங்கலம் போலீசார் கிஷோர், தர்ஷினி மீது வழக்கு பதிவு செய்தனர்.