உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அகமலை மண் சரிவை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவு

அகமலை மண் சரிவை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவு

போடி: போடி ஒன்றியம், அகமலை ஊராட்சி கண்ணக்கரை, அகமலை, அண்ணாநகர், சொக்கன் அலை, பனங்கோடை, ஊரடி, ஊத்துக்காடு, குண்டேரி, கானகமிஞ்சி, மருதையனுார், பட்டூர் உட்பட பல மலைக் கிராமங்கள் அடங்கியுள்ளன. 4 ஆயிரம் ஏக்கரில் காப்பி, பலா, எலுமிச்சை, ஆரஞ்சு, அவகோடா உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளத்தில் இருந்து கண்ணக்கரை வழியாக அகமலை செல்லும் ரோட்டில் கணேசன் தோட்டம், லீலாவதி பெண்ட் உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால் 15 மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் பாறைகள், மரங்களை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு மண் சரிவு சீரமைக்கும் பணியினை விரைந்து முடிக்குமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.உடன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சாமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, தாசில்தார் மருதுபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை