உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூலவைகை கரையில் குவியும் குப்பை

மூலவைகை கரையில் குவியும் குப்பை

தேனி : தேனி அருகே உள்ள அமச்சியாபுரத்தில் உள்ள மூலவைகை கரையில் குப்பை கொட்டுவது தொடர்கிறது.அம்மச்சியாபுரம் மூலவைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தையும் அருகே உள்ள அய்யனார் புரத்தையும் இணைக்கும் பாலம் உள்ளது. அம்மச்சியாபுரம் பகுதியில் இந்த பாலத்தின் ஓரத்தில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைக்கு சிலர் தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. மூலவைகையில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இந்த குப்பையை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வைகை அணைக்கு செல்கிறது. ஆற்று நீரை மாசுபடுத்துவதால் இதனை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி