பெண் குழந்தைகள் தின விழா
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி லிட்டில் பவர் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. 'பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்குவோம்' என்ற கருத்தை மையப்படுத்தி நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தார். நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் மாத்யூஜோயல், முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் முன்னேற்றம், பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து பேசினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா செய்திருந்தனர்.