இரண்டு மாதங்களில் 12 பேருக்கு குண்டாஸ்
தேனி: மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 12 பேரை இச்சட்டத்தின் கீழ் அடைக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் கடந்த ஏப்.,ல் கஞ்சா வழக்கில் தொடர்புடைய ஒருவர், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நால்வர் என 5பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 6 பேர், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வழக்கில் ஒருவர் என 7 பேர் மீது என மொத்தம் 12 பேர் மீது ஓராண்டிற்கு ஜாமினில் வெளிவராமல் இருக்க குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.