உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மூவருக்கு குண்டாஸ்

 மூவருக்கு குண்டாஸ்

தேனி: கம்பம் கோம்பை ரோடு ராமர் 66. இவர் தேனி வழியாக கஞ்சா கடத்தி சென்ற போது, அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ராமரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அம்மச்சியாபுரத்தில் தொழிலாளி சீனிசாமி 52 என்பவரை தகராறில் அதே பகுதியை சோர்ந்த பிரகாஷ் 44, ரஞ்ஜீத்குமார் 40 தாக்கினர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து சீனிசாமி உயிரிழந்தார். ராமர், பிரகாஷ்,ரஞ்ஜீத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., எஸ்.பி., சினேஹா பிரியா பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை