உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டை திறந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு

வீட்டை திறந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் 57. இவர் மாவட்ட தொழில் மையத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி தோட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், சுந்தரம் கடைக்கு செல்வதற்கு வீட்டின் வெளியே பூட்டிவிட்டு, சாவியை முன்பக்க குளியலறையில் வைத்து விட்டு சென்றார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுந்தரம் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன் பக்கம் கதவு திறந்து இருந்தது. உள்அறையில் மர்ம நபரால் பீரோவிலிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான நெக்லஸ், செயின், மோதிரம், கைச்செயின், தோடுகள் உட்பட 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது. தென்கரை எஸ்.ஐ., விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ