கணவர் மாயம் மனைவி புகார்
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் 27, இவரது மனைவி பாண்டிச்செல்வி 19, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 14ல் பழநி முருகன் கோயிலுக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாண்டிச்செல்வி புகாரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டியனை தேடி வருகின்றனர்.