உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புதிதாக நடவு செய்ய 100 சதவீத மானியத்தில் மா கன்றுகள்

புதிதாக நடவு செய்ய 100 சதவீத மானியத்தில் மா கன்றுகள்

போடி: போடி வட்டாரத்தில் புதிதாக ' மா' நடவு செய்திட சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ' மா ' ஒட்டு ரக கன்றுகள், இயற்கை உரம் வழங்கப்படுகிறது என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராஜமுருகன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது : போடி வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் புதிதாக ' மா ' நடவு செய்திட ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள ' மா ' ஒட்டு ரக கன்றுகள், இடு பொருட்களாக இயற்கை உரம் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இரண்டரை ஏக்கர் உள்ள விவசாயிகளுக்கு 280 ' மா ' ஒட்டு கன்றுகள், இயற்கை உரமும் வழங்கப்படும். புதிதாக ' மா ' நடவு, இடு பொருட்களாக இயற்கை உரங்கள் பெற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்தது அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று, ஆதார், சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, பாங்க் பாஸ் புக் நகலை போடி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து ' மா ' கன்று, இடு பொருட்களாக இயற்கை உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !