உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுக்கூடமாகும் நகராட்சி விளையாட்டு மைதானம்

மதுக்கூடமாகும் நகராட்சி விளையாட்டு மைதானம்

போடி: போடி சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானம் பராமரிப்பு இன்றியும், இரவில் சமூக விரோத செயல்களும், மது அருந்தும் இடமாகவும் மாறி உள்ளன.இம் மைதானத்திற்கு இரு வேளைகளிலும் இளைஞர்கள், சிறுவர்கள் மட்டும் இன்றி, வயதானவர்களும் நடை பயிற்சி, உடற்பயிற்சி, கிரிக்கெட், கூடைப் பந்தாட்டம் போன்ற பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர், கேட் வசதி இருந்தும், இரவில் பூட்டை உடைத்து மது அருந்துவோர், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மது அருந்திய பின் பாட்டில்களை அதே இடத்தில் உடைத்து விட்டு செல்வதால் காலையில் உடற்பயிற்சி மேற்கொள்ள வருவோரின் கால்களை காயம் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதோடு, சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுத்திட நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி