பி.டி.ஆர். கால்வாயில் தண்ணீர் திறப்பு
உத்தமபாளையம் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஒரு போக பாசன பகுதிகளாக சீலையம்பட்டி, கோவிந்தநகரம் தர்மாபுரி உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் நேற்று காலை டி.ஆர்.ஒ., மகாலட்சுமி ராமசாமி நாயக்கன்பட்டியில் உள்ள மதகை இயக்கி, தண்ணீர் திறந்து வைத்தார். விநாடிக்கு 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும்.