உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டு யானை தாக்கி சீதா இறந்ததாக போலீசார் உறுதி

காட்டு யானை தாக்கி சீதா இறந்ததாக போலீசார் உறுதி

மூணாறு: பீர்மேடு அருகே வனத்தினுள் கணவருடன் சென்ற பெண் காட்டு யானை தாக்கி இறந்ததாக போலீசார் உறுதி செய்தனர். இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் தோட்டப்புரா பகுதியைச் சேர்ந்த பினு 54, தனது மனைவி சீதாவுடன் 50, ஜூன் 13ல் வன விளைப் பொருட்களை சேகரிப்பதற்கு வனத்திற்குள் சென்றார். அப்போது மீன்முட்டி வனத்தில் மனைவியையும், தன்னையும் காட்டு யானை தாக்கியதாக உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இருவரும் மீட்கப்பட்டு பீர்மேடு தாலுகா மருத்துவமனையில் அனுமதித்த போது சீதா இறந்து விட்டதாக தெரியவந்தது. குழப்பம் அவரது உடல் ஜூன் 14ல் டாக்டர் ஆதர்ஷ் ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் சீதா காட்டு யானை தாக்கி இறக்கவில்லை என, டாக்டர் தெரிவித்தார். அதேபோல் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய கோட்டயம் வனத்துறை அதிகாரி ராஜேஷ், 'யானை நடமாடியதற்கான அறிகுறி எதுவும் இல்லை.' என தெரிவித்திருந்தார். அதனால் சீதா இறப்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. விசாரணை பீர்மேடு டி.எஸ்.பி. விஷால்ஜான்சன் தலைமையில் போலீசார் சம்பவம் குறித்து நடத்திய தீவிர விசாரணையில் யானை தாக்கி சீதா இறந்ததாக தெரியவந்தது. அதனை உறுதி செய்து, 'அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, டி.எஸ்.பி. தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை