ஆக்கிரமிப்பு அகற்றம்: ஆர்ப்பாட்டம்
கம்பம்: கம்பமெட்டு ரோட்டில் ஐகோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமது முழுமையாக ரீ சர்வே செய்து பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பிகளை அகற்ற கூறினார். அதன் -பேரில் ஆக்கிரமிப்பு அகற்றுவது ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பம் சட்டசபை தொகுதி நாம் தமிழர் ஆட்சி செயலாளர் சுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் பங்கேற்றனர்.